நண்பன்..
நெற்றி சுழிக்கும்
போதே வேதனை
அறிகிறாய்...
எது தேவை என்று
நானே குழம்புகையில்..
தீர்வாய் நிறைகிறாய்..
விழி ஓரம் கரிக்கும்
முன்பே ஏந்திக்கொள்கிறாய்..
ஆயாசமாய்
திரும்பும் வேளையில்
தோள் தருகிறாய்..
நட்பென்பது
இதுவோ எதுவோ..
நண்பனென்றால்
அது நீ மட்டும்.
Comments
Post a Comment