உனக்கான வலிகள்
களைய
என்றும் நான்
இருந்திருக்கிறேன்...

எனக்கான வலிகள்
கூற விளைகையில்
காணாமல்
போய்
விடுகிறாய்

மனதின்
பக்கச்சுவரில்
அமர்ந்து
எனை பார்த்துக்கொண்டிருக்கும்
உனக்கு
சொல்லாமலே
தெரிந்தும்
விடுகிறது..

கேட்டால்
உனகேதும்
நேர்ந்தால்
ஏனோ எனக்கும்
என
விடுகதையாய்
விடை சொல்கிறாய்...

Comments

Post a Comment

Popular posts from this blog

பருவமழை

மறுஜென்ம்ம்

கரைகிறேன்..