ஆசைகள்
உடைபடும்
தருணங்கள்
இருக்கவே செய்கிறது..

புதைத்து வைத்த
ஆசைகள்
பிராவகத்தின்
போதும்.

விடாது
பெய்யும்
மழை நாட்களில்...

அமிழ்த்து
வைத்த
என் சின்ன ஆசைகளில்
பற்றி எரிகிறேன்...

யாருமற்ற
மலைபாதை..
கொட்டும்
மழை..
குடையாய்
வானம்..

ஆரவாரமற்ற
அந்தி மழை
நான் மட்டும்
ஆர்பரித்து...

பனிபுல்லின்
நீர் பருகி...
பச்சைபுல்
பஞ்சனையில்
தலைசாய்த்து..

மொழி அறியா
பறவைக்கு
பதில்கூறி..
முடியாத
என்
பயணம்...

தனியே என்
சுவாசம்..
இன்னும்
இன்னும்...
ஆசைகள்
கொட்டி விட தான்
அவகாசம்
இல்லை...

Comments

Popular posts from this blog

பருவமழை

மறுஜென்ம்ம்

கரைகிறேன்..